நாகர்கோவில், ஏப்.14- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ரோடு ஷோவுக்காக மாவட்டம் முழு வதும் போக்குவரத்தை திசைமாற்றி பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒன்றிய அதிகாரத்தை வைத்து அமித்ஷா நடத்தியது ரோடுஷோ இல்லை. ரோடு குளோசர் என மக்கள் வெறுப்படைந்தனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பத்தா வது முறையாக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தக்கலையில் வாக்கு சேகரிக்கும் நோக்கத்துடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தக்கலையில் சனியன்று ரோடு ஷோ நடத்தினார். முற்பகல் 11 மணிக்கு நடந்த ரோடு ஷோ வுக்கு காலை 6 மணி முதலே மாவட்ட தலைநகர் நாகர்கோவில் உட்பட மாவட்டத் தின் பெரும்பாலான பகுதிகளை காவல்துறை யினர் தடுத்து போக்குவரத்தை திருப்பி விட்ட னர். குறிப்பாக திருவனந்தபுரம்- நாகர்கோவில் சாலையின் பெரும்பாலான பகுதிகளில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது 2 இரும்பு பாலங்களை 5 ஆண்டுகளாக கட்டி பார்வதிபுரம், மார்த்தாண்டம் பகுதிகளின் வளர்ச்சியை தடுத்தாரு. இந்த நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியை முடிக்க முயற்சி செய்யாமல் கிடப்பில் போட்டனர். 2019 தேர்தலில் அவரை தோற்கடித்த மக்களை பழிவாங்குவதுபோல் பணிகளுக்கு முட்டுக் கட்டை போட்டாரு. இதன் காரணமாக மாவட்டத் தின் போக்குவரத்து திணறுகிறது. இந்த நிலை யில் அமித்ஷா நடத்திய ரோடு ஷோ இல்லை. ரோடு குளோசர். கடைகள் அனைத்தும் மூடப் பட்டன. தக்கலையில் அதே இடத்தில் இரண்டு நாளைக்கு முன்பு (ஏப்.11) தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பா ளர் விஜய் வசந்தை ஆதரித்து பேசினார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்த கூட்டத்தால் அரை மணி நேரம் மட்டுமே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. பொதுமக்களுக்கு அதனால் எந்த பாதிப் பும் ஏற்படவில்லை. கடைகளும் மூடப்பட வில்லை. அதைவிட குறைவான கூட்டத்தை வைத்து ஆடம்பரமாக நடத்தியது அதிகார அத்துமீறல் என்பதே குமரி மாவட்ட மக்களின் கருத்தாக உள்ளது.