திருச்சிராப்பள்ளி, டிச.31 - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திருச்சி நகரின் பஞ்சப்பூரில் வர விருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு (IBT) அருகில் பல்நிலை உயர்மட்ட பாலம் உருவாக்க ரூ.331 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தென் மாவட்டங்களை திருச்சி மற்றும் சென்னையுடன் இணைக்கும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை யில் தடையின்றி வாகனங்கள் செல்வ தற்கு இந்த புதிய மேம்பாலம் உத வும்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் குறுக்கிடும் வகையில், தஞ்சாவூர்-கரூர் அரைவட்ட சாலை யில் ஒரு தனி குறுகிய மேம்பாலம் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மேம்பாலங்களும் இரு வெவ்வேறு நிலைகளில் ஒரே நேரத்தில் வாகன இயக்கத்தைக் கையாளும்.
புதிய பேருந்து முனையம், டிரக் டெர்மினல், டைடல் பார்க், பிராந்திய ஒலிம்பிக் பயிற்சி அகாடமி மற்றும் மொத்த காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் இதில் திட்டமிடப்பட்டுள்ள. போக்கு வரத்து இடையூறுகளைத் தடுக்க நெடுஞ்சாலை திருச்சி திட்ட அமலாக்க பிரிவு (PIU) மேம்பாலங்களின் முக்கி யத்துவத்தை வலியுறுத்துகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில், “திருச்சி மாநகராட்சி மூலம் மேம்பாடு பணிக்காக போதிய நிலம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் உள்ளூர் போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்தை தனிமைப்படுத்து வதே எங்களது முன்னுரிமை. புதிய பேருந்து முனையத்தின் layout மேம் பாலத்துடன் இணையும்படி இது வடி வமைக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்திற்கு இடையூறு இல்லாத அணுகு சாலையை அனுமதிக்கும் வகையில், எட்டு வழிச் சாலைகள் உருவாக்கப் படும். மேலும், பாதசாரிகள் நெடுஞ் சாலையை பாதுகாப்பாக கடந்து ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மொத்த காய்கறி சந்தையை அடைய இரண்டு சுரங்கப் பாதைகள் கட்டப்ப டும். இப்பணிகளை ஏப்ரல் 2024-க்குள் துவங்கவும், அவை 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்ற காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.