districts

img

திருச்சி மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிற்கும் சாலை- மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு

திருச்சிராப்பள்ளி, பிப்.21-  திருச்சி மாநகராட்சியில் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் பிப்ரவரி 21 புதனன்று செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையை   மேயர் மு.அன்பழகன் தாக்கல் செய்து பேசிய தாவது: 2024-2025 இல் மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிற்கும் சுமார் ரூ.40 லட்சம் சாலைப்பணிகளுக்கெனவும் மற்றும் ரூ.50 லட்சம் மழைநீர் வடிகால் அமைப்ப தற்கெனவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் மாநகராட்சியில் உள்ள   தெரு வோர வியாபாரிகளுக்கான ஆய்வு நடத்தப் பட்டு, அதனடிப்படையில் கமிட்டி அமைப்ப தற்கும், தேர்தல் நடத்துவதற்கும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி மூலம் தெரு வோர வியாபாரிகள், வியாபாரம் நடத்துவ தற்கு உரிய பகுதிகளை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக யானைக்குளம் பகுதி யில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியில் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கென ஸ்ட்ரீட் வெண்டிங் ஜோன் அமைத்து,  வியாபாரிக ளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், வழிவகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலரண் சாலையில் பன்னடுக்கு வாக னங்கள் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மேலரண்சாலை வாகனங்கள் நிறுத்தக் கூடாத மண்டலம்(நோ பார்க்கிங்) என அறிவிக்கப்படும். தெப்ப குளம் முதல் இப்ராஹிம் பூங்கா வரை ஐந்து  வார்டு அலுவலகங்களிலும் இடவச திக்கேற்ப உணவுத் தெரு அமைப்புகள் உரு வாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்     மாநகராட்சிப் பள்ளிகளில்  எல்கேஜி, யுகேஜிக்கு தனி கட்டிடம்  மாநகராட்சிப் பள்ளிகளில் இட வசதிக் கேற்ப எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கென தனி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோ திக்கும் அறையில், விடுபட்ட மருத்துவமனை களில் குளிர்சாதன வசதிகள் அமைக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.140.00 கோடி மதிப்பீட்டில்,  சுமார் 250 கி.மீ நீளத்திற்கு தார்ச் சாலை அல்லது கான்கிரீட் சாலை, பேவர் பிளாக்சாலைகள்  அமைக்கப்படும்.புதுப்பிக்கப்படும். சீரமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார் திருச்சி மாநகராட்சியின் 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் முழுமை யாக வாசித்தார். அதன் சாராம்சங்கள் வருமாறு; திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட பின்னர் மென் பொருள் தொடர்பான பணியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் யாத்திரிகர்கள் மற்றும் வியா பார நோக்கில் வரும் பயணிகளின் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதா லும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டி யதை கருத்தில் கொண்டும் இந்த 2024-25 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடு கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ. 310 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி 

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்குள் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பயணிகள் காத்திருக்கும் கூடம் கட்டும் பணிக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.  161.70 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட  அறிக்கை தயார் செய்து நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குன ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.  பஞ்சப்பூர் முதல் கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் ஆற்று கிழக்குக்கரை பகுதியில் புறவழிச் சாலை 3 தொகுப்புகளாக அமைக்கும் பணிக்கு ரூ. 310 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் தினமும் சேகரிக் கப்படும் மக்கள் குப்பைகளை முறையாக கையாண்டு மறு பயன்பாடு செய்யும் வகையில் எஸ்பிஎம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு  சுமார் 100 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பயோ எரிவாயு உற்பத்தி நிலை யம் அமைத்திட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்மொழி வுக்கான கோரிக்கை நிலையில் உள்ளது. மேலும் மக்காத குப்பைகளை முறை யாக கையாண்டு அப்புறப்படுத்தின மேற்கண்ட திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் 200 வெற்றி தன் கையாளும் திறன் கொண்ட பொருள் மீட்பு வசதி மையம் அமைத்திட விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு முன் வழிவுக்கான கோரிக்கை கோரப்படும் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் சுமார் 83 கிலோமீட்டர் நீளத்தி ற்கு மண் சாலைகளை படிப்படியாக தார் சாலைகளாகவும் சிமென்ட் காங்கிரீட் சாலை களாகவும் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது இந்த சாலை பணிகளை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சுமார் 52 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக மழை நீர் வடிகால் கட்டுதல் மற்றும் நடை பாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டு தல் போன்ற பணிகளை ரூபாய் 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.