தஞ்சாவூர், அக்.21- தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக பேருந்து நிலையத்தை, புதிய பேருந்து நிலையம் அருகே, புதிதாக கட்டப் பட்ட ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையை பாதுகாக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இட மாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை பணிமனை சிஐடியு தலைவர் சா.செங்குட்டுவன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், சிஐடியு விரைவுப் போக்குவரத்து கழக மாநில துணைத் தலைவர் பி.வெங்கடேசன், ஏஐடியுசி சம்மேளனம் துரை.மதிவாணன், சிஐடியு கும்பகோணம் மண்டல பொருளாளர் எஸ்.ராமசாமி, விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் எஸ். ஞானசேகரன் மற்றும் அனைத்து தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பணிமனை துணைத் தலைவர் பரத்ராஜன் நன்றி கூறினார்.