districts

img

கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

நாகப்பட்டினம், ஜூலை 13 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து  ரயில் போக்குவரத்து நடைபெறு கிறது. நாகப்பட்டினம் வருகிற அனைத்து ரயில்களும் கீழ்வேளூர் மார்க்கமாகத்தான் வந்து செல்கின்றன. கீழ்வேளூர் பேரூராட்சி, சட்டமன்றத் தொகுதியின் தலைமையிடமாக விளங்குகிறது. அந்த பேரூராட்சியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இதில் குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. கீழ்வேளூர், தேவூர் சாலையில் ரயில் வழித்தடம் குறுக்கிடுகிறது. இத னால் ரயில் வந்து செல்லும் நேரங்க ளில் ரயில்வே கேட் மூடப்படுவதால் பல்வேறு வகைகளில் நெரிசல் ஏற்படு கிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், தினசரி வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே கீழ்வேளுர் - தேவூர் சாலை யில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி யும், அனைத்து ரயில்களும் கீழ்வேளூர்  ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல  கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்ரமணியன், என். எம்.அபுபக்கர், ஒன்றியச் செயலா ளர்கள் ஆர்.முத்தையன், ஏ.வடிவேல்  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.