districts

img

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம்: அனைத்துக் கட்சி, வெகுஜன அமைப்புகள் மரியாதை

திருச்சிராப்பள்ளி, டிச.6 - சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 67 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அவரது உருவச் சிலைக்கு, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமுஎகச, வாலிபர், மாணவர், மாதர் சங்கங்கள், சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கர் 67-வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலைய அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ராஜா (திருச்சி மாநகர்), சின்னை.பாண்டியன் (தஞ்சாவூர்), பி.சீனிவாசன் (மயிலாடுதுறை), பி.ரமேஷ் (பெரம்பலூர்) மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலு உள்பட அனைத்துக் கட்சிகள், வெகுஜன அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.