districts

img

மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி கற்க வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் ஆக்கூர் அரசுப் பள்ளி

மயிலாடுதுறை, டிச.5 - தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை மையப்படுத்தி வண்ண  வண்ண ஓவியங்களை சுவர் முழுக்க தீட்டி  வைத்து, கல்வி பயில வரும் மாணவர் களுக்கு உற்சாகமூட்டி  பாடங்களை கற்றுத்  தருகிறது ஆக்கூர் அரசுப் பள்ளி.  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆக்கூர், சௌரியா புரம், புங்கையன்தோப்பு, கல்லடி, வௌவால் தோப்பு, உடையவர் கோவில்பத்து, பண்டார வடை, தெற்குத்தெரு, வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை-எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களிலிருந்து 305 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 11 ஆசிரி யர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி  வருகின்றனர். வளாகம் முழுவதும் நிழல் தரும் மரங்களை வளர்த்து, குளிர்ச்சியான சூழலுடன் அமைந்துள்ளது இப்பள்ளி. சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் எளிதில் பதியும் வகையில் அப்பள்ளி ஆசிரி யர்கள் பாடங்களை கற்றுத் தந்து பலரின் பாராட் டுகளை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.  1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை உள்ள  இங்கு, ஓவியங்கள் இல்லாத சுவர்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் எழுத்து கள், இலக்கணம், ஆங்கில பாடங்கள், அறி வியல், கணித பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக  அழகாக வரைந்து வைத்துள்ளனர். புதுப்பிக் கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடம், மற்று மொரு வகுப்பறை என மூன்று  வகுப்பறைகளில் பாலா புரா ஜெக்ட் திட்டத்தின் கீழ் ஓவி யங்களை தீட்டியுள்ளனர்.  குறிப்பாக ஒன்றிய நிதியி லிருந்து ஆக்கூர் ஊராட்சி மன்றத்  தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகனின்  பெரும் பங்களிப்பில், இந்த இரு  வகுப்பறை கட்டிடங்கள் அழகிய  ஓவியங்களால் ஒளிர்கிறது. மேலும் வகுப்பறை தரையில் கணித  பாடம் கற்றுக்கொள்ளும் வகையில்  டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேற் கூரையில், அனைவரையும் கவரும் வகை யில் கோள்கள் வரையப்பட்டுள்ளன. அறிவியல் கண்காட்சி, கலைத் திரு விழா, கலைகளை வெளிப்படுத்தும் வித மான பயிற்சிகள், தனித் திறமைகளை ஊக்கு வித்தல், வீணாகும் பொருட்களைக் கொண்டு  பயன்படும் பொருட்கள் தயாரித்தல் என  பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இப்பள்ளி,  கல்வி வளர்ச்சி நாளையொட்டி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் பட்டு ரூ. 50 ஆயிரம் பரிசு பெற்றுள்ளது. அந்த பரிசுத்தொகையோடு மேலும் ரூ.76  ஆயிரம் செலவு செய்து, வகுப்பறைகளுக்கு டைல்ஸ் கற்களை பதித்து தலைமையாசிரி யர் சித்ரா பல்வேறு தரப்பினரின் பாராட்டு களைப் பெற்றுள்ளார். இதனிடையே தமிழ் நாடு அரசு, மாநில அளவில் சிறந்த பள்ளி யாக தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித் துள்ளது. விருதுக்கு தேர்வான பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊராட்சி நிர்வா கம், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.  ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்,  பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், பெற் றோர், மாணவர்களின் கூட்டு முயற்சியால்  தொடர்ந்து சாதிக்கும் ஆக்கூர் அரசு நடு நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடங்களை யும், அடிப்படை வசதிகளையும் கூடுதலாக செய்து தந்தால் அப்பள்ளி மாணவர்கள் மேலும்  சாதிப்பார்கள்.