districts

img

மே தின பேரணிக்கு அனுமதி மறுப்பதா?

அரியலூர், மே 3 - உலகத் தொழிலாளர்க ளின் ஒற்றுமைத் தினமான 138 ஆவது மே தினத்தையொட்டி, அரியலூரில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்திட ஏஐடியுசி- சிஐடியு ஏற்பாடு செய்திருந் தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம்  காட்டி வருவாய் கோட்டாட்சி யர் மே தின பேரணி - பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க  மறுத்துவிட்டார்.  அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மே தின பேரணி -  பொதுக்கூட்டத்துக்கு அனுமதி  வழங்கி, நடைபெற்றுள்ள நிலையில் அரியலூரில் மட்டும்  வருவாய் கோட்டாட்சியர் அனு மதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  பேரணிக்கு காவல்துறை யினர் அனுமதி மறுத்த நிலை யில், பேரணிக்காக வந்திருந்த  தொழிலாளர்கள் அண்ணா சிலை முன்பு பொதுக் கூட்ட மாக நடத்தினர். கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச்  செயலாளர் த.தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியு  ஆர்.சிற்றம்பலம், க.கிருஷ் ணன், ஏஐடியுசி ரெ.நல்லுசாமி, ஜி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத் தில் விவசாயத் தொழிலா ளர் சங்கம் மாநில பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம், ஏஐ டியுசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  திருபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாவட்டச் செயலாளரு மான இரா.உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் இளங் கோவன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சொ.இராமநாதன் உட்பட ஏஐடியுசி - சிஐடியு நிர்வாகிகள் 300-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி நன்றி கூறினார்.