districts

img

மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையே சாட்சி

சின்னாளப்பட்டி, ஏப்.9- திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தத்திற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அப்துல் சமது நிலக்கோட்டை மினி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற் கொண்டார்.  அவர் பேசுகையில், ‘‘மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு ஒற்றை செங்கலு டன் நிற்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையே சாட்சி.  இந்த தேர்தல் தர்மத்திற் கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். மாநில அரசின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு இருக்கும் மோடி அரசு மீண்டும் ஆட்சி க்கு வந்தால் மாநிலங்களே இருக்காது.  மக்கள் எழுச்சிமிக்க போ ராட்டத்தால் தான் வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. சிஏஏ, வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி பழ னிச்சாமி.  இந்தியாவிலேயே கல்வி  வளர்ச்சிமிக்க மாநிலம் தமிழ் நாடு. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாணவர்க ளுக்கு ரூ.1000 அளித்தது. ஆனால், மோடி அரசு நீட் தேர்வை கொண்டு வந்து 22 பேரை கொன்றது மோடி. விஸ்வகர்மா யோஜனா திட்டத் தைக் கொண்டு வந்து மாணவ, மாணவிகளின் எதிர் காலத்தை முடக்குகிறது.  ஜூன் 4 அன்று மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’’ என்று பேசினார்.  கூட்டத்தில் திமுக ஒன்றி யச் செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் ஜோசப், கோவில் பிள்ளை பேரூராட்சி தலைவர் சுபாஷினி கதிரே சன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் நிஜால் முகமது, ஒன்றியத் தலைவர் முக்தர் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் குண சேகரன், மாநிலக் குழு உறுப்பி னர் டில்லி பாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன், கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச் செயலா ளர் செந்தில்குமார் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.