மதுரை, மார்ச் 29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரு டன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி நாடாளுமன்ற தொகுதி அதி முக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள வர் நாராயணசாமி. இவர் வியாழனன்று தேனி நாடாளுமன்ற தொகுதி, சோழவந் தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்குகள் சேக ரித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளு டன் குமாரம் எனும் இடத்திலிருந்து தனது பிரச்சாரத்தை துவக்கிய நாராயண சாமி கோட்டைமேடு, கல்லணை, அலங்கா நல்லூர் என பல்வேறு கிராமங்களில் பிரச்சா ரம் மேற்கொண்டார். அப்போது கல்லணை கிராமத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சா ரம் முடிந்து கிளம்பியவுடன் அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் பெண்களை வரிசையில் நிறுத்தி தலா ரூபாய் நூறு வீதம் பணப்பட்டுவாடா செய்தார். மேலும் பிரச்சாரத்தில் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டிய நிலையில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றன.