districts

img

நூறு நாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்குக! விவசாயத் தொழிலாளர்கள் மனு

திருச்சிராப்பள்ளி/நாகப்பட்டினம், செப்.29 - திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் காளிபட்டி கிராமத்தில் சாலை, சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.  இதில் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஆனந்தன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் சங்கிலிதுரை, ஒன்றி யச் செயலாளர் ராஜேஷ் மற்றும்  ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நூறு நாள் வேலையில் உடன டியாக சம்பளத்தை வழங்க கோரி  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு  ஒன்றியம் சார்பாக சாலை மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் எம்.முரு கையன், சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன், மாவட்டக் குழு உறுப் பினர் ஏ.சிவகுமார் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர்.  இதைத் தொடர்ந்து அதிகாரி களுக்கும், விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினருக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. அதில்,  ‘இன்னும் ஒரு வாரத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்’ என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்பட்டது. வேதாரண்யம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  நூறுநாள் வேலை தொழிலா ளர்களுக்கு 5 மாதங்களாக ஊதி யம் வழங்கப்படாததை கண்டித்து  பலகட்ட போராட்டங்கள் நடை பெற்றன. ஆனால் ஒன்றிய-மாநில  அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், வெள்ளியன்று வேதா ரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லர் பாஸ்கரனிடம் விவசாயத் தொழிலாளர்கள் மனு அளித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.