மயிலாடுதுறை, ஜன.23- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள மாணிக்கபங்கு ஊராட்சி ஆணைக்கோயிலில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத் துறையின் சார்பில் வேளா ண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டி டம் அடிக்கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கான கட்டிடப் பணிகளை பூம் புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் துவக்கி வைத்தார். ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், ஊராட்சி தலைவர் மோகன், வேளாண்துறை அதிகாரிகள், அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.