districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க மண்டல பயிற்சி முகாம்

நீடாமங்கலம், ஆக.30 - அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத் தின் திருச்சி மண்டல பயிற்சி  முகாம் திருவாரூர் மாவட்டம்  நீடாமங்கலத்தில் நடை பெற்றது.  ஆக.30, 31 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி முகாமின் முதல் நாளான புதன்கிழமை அமர்விற்கு மாநில துணைத் தலைவர்  எம்.முருகையன் தலைமை வகித்தார். வரவேற்பு  குழு தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன் வரவேற்றார். முதல் நாள் பயிற்சி முகா மின் ஆசிரியர்களாக கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை, விவ சாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எஸ்.சங்கர் ஆகி யோர் பங்கேற்றனர். மாநிலப் பொருளாளர் அ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.குமாரராஜா, மாவட்டப் பொருளாளர் ஆறுபிரகாஷ், மாநிலக் குழு உறுப்பினர் ஜாக்குலின் மேரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. வி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.