districts

img

தஞ்சை பெரிய கோயிலில் மகா நந்திகேசுவரருக்கு ஆயிரம் கிலோ காய்கனிகளால் அலங்காரம்

தஞ்சாவூர், ஜன.16 - தைப் பொங்கல் விழாவை யொட்டி, தஞ்சாவூர் பெரிய  கோயிலில் உள்ள மகா நந்திகேஸ் வரருக்கு சுமார் ஆயிரம் கிலோ எடையிலான காய்கனிகள், இனிப்பு வகைகளால் செவ் வாயன்று அலங்காரம் செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் மகா நந்தி கேஸ்வரருக்குச் திங்களன்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்ற நிலை யில், மகா நந்திகேஸ்வரருக்கு செவ்வாயன்று ஏறத்தாழ  ஆயிரம் கிலோ எடையில் உருளைக்கிழங்கு, கத்திரிக் காய், பரங்கிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, முள்ளங்கி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி போன்ற பழ வகைகளா லும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி போன்ற இனிப்பு களாலும், மல்லிகை, செம்பருத்தி, செவ்வந்தி போன்ற பூ  வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொ டர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேஸ்வரர் முன் 108 கோ பூஜை நடைபெற்றது.  விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர்  எஸ்.மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.