தஞ்சாவூர், ஜூலை 19-
தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலக எல்லை சீரமைப்பு தொடர்பாக ஜூலை 20, 21 தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவிக்கையில், “பொதுமக்கள் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக் கோட்டை, கும்பகோணம் பதிவு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள் சீரமைக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கும்ப கோணம் பதிவு மாவட்டத்துக்கு கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலு வலகக் கூட்ட அரங்கில் ஜூலை 20 நண்பகல் 12 மணியளவிலும், பட்டுக் கோட்டை பதிவு மாவட்டத்துக்கு பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலு வலகக் கூட்ட அரங்கில் ஜூலை 21 நண்பகல் 12 மணியளவிலும், தஞ்சா வூர் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் ஜூலை 21 பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு சார் பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைப்பு தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரி விக்கலாம்” என்றார்.