districts

img

ஊதிய விகிதத்தை உடனே மாற்றி அமைத்திடுக! பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21 - 1.1.2007 முதல் இ1ஏ ஊதிய விகிதத்திற்கு  பதிலாக இ2 ஊதிய விகிதமும், இ2ஏ ஊதிய  விகிதத்துக்கு பதிலாக இ3 ஊதிய விகிதத்தை யும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30  சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். 7.8.2022 அன்று நடைபெற உள்ள  ஜேடிஓ இலாகா தேர்வும், இதர இலாகா தேர்வுகளும் 31.1.2020 அன்று உள்ள காலிப் பணியிடங்களை வைத்தே நடத்தப்பட வேண்டும்.  பிரிவு அடிப்படையில் பணி வழங்கு வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பேக்லாக் காலிப்  பணியிடங்களை, கால தாமதமின்றி உடனடி யாக நிரப்ப வேண்டும். 27.10.2021 அன்று ஏயூஏபியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது சிஎம்டி பிஎஸ்என்எல் கொடுத்த நிறை வேற்றப்படாத வாக்குறுதிகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று திருச்சி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு ஏஐஜிஇடிஓஏ செந்தில் குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்இயூ அஸ்லாம் பாஷா துவக்க உரையாற்றினார். இதில் ஏஐபிஎஸ்என்எல்இஏ சசிக்குமார், அசோக்குமார், எஸ்இடபுள்யூ, ஏபி எஸ்என்எல் தாமரை கண்ணன், சரவணன்,  டிஇபியூ சுப்பிரமணியன், பிஎஸ்என்எல்இயூ முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முன்னதாக எஸ்என்இஏ சக்திவேல் வர வேற்றார். முடிவில் என்எப்டிஇ மாநில தலை வர் காமராஜ் நிறைவுரை ஆற்றினார். இதில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;