வேங்கைவயல் இரட்டைக் குவளை வழக்கு ஜன.19-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, ஜன. 5- புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் மக்களுக்கு இரட்டைக் குவளை பயன்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கு ஜன.19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வேங்கைவயலில் கடந்த 2022 டிசம்பர் மாதம் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடை யில், வேங்கைவயல் மக்களுக்கு அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டைக் குவளை பயன்படுத்தியதாகவும், அய்ய னார் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்படவில்லை எனவும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், வெள்ள னூர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு இருவேறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இவ்விரு வழக்கையும் ஜன.19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதற்கிடையில், இவ்விரு வழக்கும் முறையாக விசாரிக்கப் படவில்லை என்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என வேங்கைவயல் பகுதியினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனுவை நீதிமன்றம் பரிசீலனையில் வைத்துள்ள தாக தெரிகிறது.
கும்பகோணம் அரசுக் கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடு
கும்பகோணம், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)யில் கடந்த நவம்பர் 2023 இல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கானப் பருவத் தேர்வு கள் நடைபெற்றன. அத்தேர்வை 3365 இளநிலைப் பட்ட மாண வர்களும், 780 முதுநிலை பட்ட மாணவர்களும் என மொத்தம் 4145 மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்டார். அதன்படி மாணவர்கள் தேர்வு முடிவுகளை தங்கள் துறைகளின் மூலமாகவும், கல்லூரி யின் https://gacakum.ac.in/ என்ற இணையதளம் வாயி லாகவும் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரி வித்துள்ளார்.
சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம்
அரியலூர், ஜன.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணி கள் குழு சார்பில் இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி யில் நடைபெற்றது. பரப்ரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவரும் அன்னை தெரசா கல்வி குழும நிறுவனருமான முத்துக்குமார் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான லதா, “சட்டத்தின் பொது விதிகள் முன் அனைவரும் சமம், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், பாலியல் வன்கொ டுமையில் இருந்து பாதுகாப்பது, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், தொட்டில் குழந்தை திட்டம், கல்வியின் முக்கியத்து வம், பாதுகாப்பு விதிகள்” உள்ளிட்டவை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜசேகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் ஆகியோர் சட்டங்களைப் பற்றி பேசினர். நிகழ்ச்சியில் சமூக அறிவியல் ஆசிரியர் குணா மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் மாசி மகம் விழா: முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
கும்பகோணம், ஜன.5 - அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட கும்பகோணம் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்டாட்சியர் செ.பூர்ணிமா முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. 2024 மாசி மகம் மற்றும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாமக திருவிழாவையொட்டி, சைவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் தேரோட்டங்கள், ஓலை சப்பரம், சுவாமி வீதியுலா, தெப்பம், மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா.லெட்சுமணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒய்.ஜாபர் சித்திக் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள், வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்
திருச்சிராப்பள்ளி, ஜன.5 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி கள் நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத் தியுள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத் தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அண்ணா விளையாட்டரங்கில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கபடி, கை யுந்து பந்து மற்றும் கால்பந்து போட்டி களை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். போட்டிகளில் வெற்றி பெறு பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை ரூ.2,40,000 மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட உள்ளது.
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர், ஜன.5 - தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக சுற்றுச்சூழலுக்கு அர்ப்பணித்த வர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற் கான ‘தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது’ வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதில் கரூர் மாவட்டத்திற்கென 3 விருதுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். பசுமை சாம்பியன் விருது 2023- 24-க்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்பு ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ/மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யம், கரூர் என்ற முகவரியை அணுக லாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்த விளக்க கூட்டம்
நாகப்பட்டினம், ஜன.5 - அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை முன்னிட்டு, நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயில் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட பொதுச் செயலாளர் எஸ். ஆர்.ராஜேந்திரன், மண்ட லத் தலைவர் கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலா ளர் அ.தி.அன்பழகன், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சு.சிவகுமார் உள் ளிட்டோர் உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு
திருவாரூர், ஜன.5 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றியம் எர வாஞ்சேரி பகுதியில் பிற கட்சியிலிருந்து விலகி நான்கு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தனர். பிற கட்சியிலிருந்து விலகிய 8 பேர், குடவாசல் வடக்கு ஒன்றியம் கூந்தலூர் ஊராட்சி ஒன்றியம் அனியன் தோப்பு பகுதியில் தோழர் ஜெயராஜ் தலைமையில், தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட னர். இதையொட்டி அந்தப் பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட கொடி மரத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வி.ராஜதுரை முன்னிலை வகித்தார். மூத்த தோழர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற திருநங்கை
கும்பகோணம், ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள பிரபல தனியார் ஜுவல்லரியில் திரு நங்கை ஒருவர் புத்தாண்டு அன்று அன்பளிப்பு கேட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்த செக்யூரிட்டி, அவரை கடைக் குள் செல்லக் கூடாது என்று தடுத்துள்ளார். அப்போது இரு வருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதில் செக்யூ ரிட்டியை திருநங்கை தாக்கியுள்ளார். பதிலுக்கு செக்யூ ரிட்டியும் திருநங்கையை திருப்பித் தாக்கியுள்ளார். இந்நிலையில், ஜுவல்லரி வாயிலில் செக்யூரிட்டி யிடம் தகராறு செய்த திருநங்கை, தனது சக திருநங்கை களுடன் புதன்கிழமை மீண்டும் அந்த ஜுவல்லரிக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஆனால், அங்கு முதல் நாள் பணியிலிருந்த செக்யூரிட்டி இல்லாததால், அவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுவதாக கூறி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்ப கோணம் மேற்கு போலீசார் திருநங்கைகளை காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி பிரச்சனை குறித்து விசா ரித்தனர். இது சம்பந்தமாக கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசனும் காவல் நிலையத்திற்கு சென்று திருநங்கை களிடம் விசாரணை நடத்தினார். ஆனால் திருநங்கைகள் அவர்கள் கூறியதை கேட்காமல், அங்கிருந்த அதிகாரி களை ஒருமையில் பேசி கூச்சலிட்டனர். இதற்கிடையில், அங்கிருந்த திருநங்கைகளில் ஒருவர் காவல் நிலையத்துக்கு வெளியே வந்து பாட்டிலில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக முழக்கமிட்டார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் மகளிர் போலீ சார் அந்த திருநங்கையின் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இருப்பினும் சமாதானமாகாத திருநங்கைகள், போலீ சாரையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த நிருபர்களை யும் திட்டிவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றனர். இதனால் கும்பகோணம் மேற்கு காவல் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிபிஎம் போராட்டம் வெற்றி மீண்டும் அதே வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கம்
தஞ்சாவூர், ஜன.5 - திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வரும் எண்.87 - நகரப் பேருந்து ஒரத்தூர் - ஆற்காடு - முல்லைக்குடி வழியாக திருக்காட்டுப்பள்ளி சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படவில்லை. தற்போது அந்த பேருந்து விண்ணமங்கலம், பூதராயநல்லூர் வழியாக திருவெறும்பூர் செல்கிறது. இப்பேருந்து, ஆற்காடு முல்லைக்குடி வழியாக இயக்கப்படாததால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தடம் எண். 87 அரசுப் பேருந்தை மீண்டும் ஏற்கனவே சென்ற வழியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை முல்லைக்குடி, ஆற்காடு கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி தலைமையில், அந்தப் பேருந்தை திருக்காட்டுப்பள்ளியில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், காவல்துறை ஆய்வாளர் ஜெயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் மீண்டும், முல்லைக்குடி, ஆற்காடு வழியாக பேருந்து இயக்கப்பட்டது. போராட்டத்தில் சிபிஎம் கிளைச் செயலாளர் பழனி, சிபிஎம் உறுப்பினர் அந்தோணிசாமி, விவசாய தொழிலாளர் சங்கம் ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.