திருச்சிராப்பள்ளி, நவ.22 - சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக் கும் திட்டத்தின்கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன் பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறை வானதோ அது தமிழ்நாடு அரசின் மானிய மாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில்முனைவோரின் கோரிக் கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைத்து, நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இது தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.11.2023 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற இருந்த கூட்டம், நிர்வாக காரணத்தை முன்னிட்டு 7.12.2023 அன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் முனை வோர் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசால் துணிநூல் துறை யின்கீழ் ஜவுளித் தொழில் சார்ந்த தொழிலா ளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பான கூடு தல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்கு நர், துணிநூல் துறை, மண்டல துணை இயக்கு நர் அலுவலகம், எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணிமலை, கரூர்-639 005 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04324-299 544, +91-9843212584 என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.