districts

img

ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானைப் பாகனுக்கு விருது

கும்பகோணம், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் சங்கராச்சாரி யாரால் வழங்கப்பட்ட சுமார் 55 வயதுடைய மங்களம் என்ற யானையை, பாகன் அசோக் குமார் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் தனது குழுவினர்களுடன் பராமரித்து வருகிறார். சம்பவத்தில் இந்த யானை, பாகன் அசோக்குமாருடன் விளையாடிக் கொண்டி ருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில் தென்னிந்திய யானை கள் நல்வாழ்வு மையம் சார்பில், கும்பகோ ணம் கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம்,  தென்னிந்தியா கோயில் யானைகளில் சிறந்த தாக 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அந்த யானையை பராமரித்து வரும் பாகன் அசோக் குமார், தமிழகத்தில் முத லிடத்தையும் பெற்று உள்ளார். பாகன் அசோக்குமா ருக்கு, ‘தமிழ்நாட்டில் சிறந்த யானை பரா மரிப்பு பாகன்’ என்ற முத லிடத்தை பெற்றதற்கான விருது வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் தென்னிந்திய யானைகள்  நல்வாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் அஜித்குமார், கும்பேஸ்வரர் கோயில்  ஆணையர் சாந்தா, செயல் அலுவ லர் கிருஷ்ணகுமார், அறங்காவல் குழு வினர்கள் மற்றும் யானை பாகன் அசோக் குமாரின் குழுவினர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக கோயில் யானை மங்களத் திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காய் கறி, பழங்கள், உணவுகள் வழங்கப்பட்டன.