districts

குற்றச்செயல்களை தடுக்க, போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்த கூடுதல் சோதனைச் சாவடிகள்

திருச்சிராப்பள்ளி, மே 17-

    திருச்சிராப்பள்ளி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிரா மப்புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், குற்றச் செயல்களைக் கண்கா ணிக்கவும் தடுக்கவும் தற்போதுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக ஏழு புதிய சோதனைச் சாவடி களை அமைக்க நகர் காவல்துறை முன்மொழிந்துள்ளது.

   மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், சென்னை, கரூர்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் நகரின் வழியாகச் செல்கின்றன. தற்போது, திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை  சாலையில் பஞ்சப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்  பட்டு, தஞ்சாவூர் சாலையில் காட்டூர் ஆயில்மில் அருகில்,  சென்னை சாலையில் ‘ஒய்’ சாலை சந்திப்பு, கரூர் சாலை யில் குடமுருட்டி ஆறு ஆகிய இடங்களில்  ஒன்பது காவல்  சோதனைச் சாவடிகள் உள்ளன. நகரில், திருவானைக் கோவில் மற்றும் லிங்கம் நகர் சோதனைச் சாவடிகள் திருச்சிராப்பள்ளி நகர் காவல் எல்லையில் இயங்கு கிறது. குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும், தடுக்கவும், வாகனச் சோதனைகளை எளிதாக்கவும், கூடுதல் சோத னைச் சாவடிகள் அமைக்க, நகர் காவல்துறையினர் யோசித்து வருகின்றனர்.

    நகரில் ஓலையூர் சாலை, கோரையாற்றையும், உய்யகொண்டான் கால்வாயையும்  இணைக்கும் பாலம் அருகே, கவி பாரதி நகர் பிரிவு,  மேலக்கல்கண்டார்கோட்டை, அரியமங்கலம் குவளக்குடி  பாலம், கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை, சர்க் கார்பாளையம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    ஒரு சில இடங்களில் இருக்கும் சோதனைச் சாவடி களை அருகிலுள்ள பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.