கரூர், செப்.20 - மாட்டு வண்டியில் நேரடி யாக மணல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென சிஐ டியு கரூர் மாவட்டக் குழு சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 9.2.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப் பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது. மாட்டு வண்டிகள், லாரி கள் என தனித்தனி மையங்க ளில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரி களுக்கு முன்னுரிமை அளிக் கும் நிலை தொடர்கிறது. இதை கண்டித்தும், மணல் லாரிகள் மூலம் நேரடியாக ஆறுகளில் இருந்து மணல் எடுப்பதால், விதிமுறை களைப் பின்பற்றாமலும், லாப நோக்கிலும் நேரடி யாக விற்பனைக்கு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. இதனால் மணல் அள்ள 2 ஆண்டுகள் கால அவகாசம் இருந்தும், குறுகிய காலத்தி லேயே மணலை அள்ளி முடிக்க வேகம் காட்டப்படு கிறது. இதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி உள்ளது. லாரிகள் மூலம் மணல் அள்ளப் படு வதையும், லாரிகளுக்கு மணல் விநியோகிப்பதை யும் ரத்து செய்தால் மட்டுமே மாட்டுவண்டி தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். முறை கேடுகளையும் தடுக்க முடி யும். தற்போது அமலாக்கத் துறை ஆய்வுகள் காரண மாக மணல் விநியோக பணி கள் முற்றிலும் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. இதனால் மாட்டுவண்டித் தொழிலா ளர்கள் வேலையின்றி பெரி தும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். மேலும் கால்நடை களுக்கு உணவளிக்க முடி யாமலும், கால்நடைகளை பராமரிக்க முடியாமலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. எனவே மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க மாட்டு வண்டியில் நேரடியாக மணல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை மனுவை வழங்கப் பட்டது. மாட்டுவண்டி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. கந்தசாமி தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணி யன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.