திருவாரூர், டிச.31- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் வெளியாகும் வகையில் செயல்பட்ட காவல்துறையையும், அரசையும் கண்டித்தும், திருவாரூர் திருவிக கல்லூரி மாணவிகளை தொலை பேசியில் ஆபாசமாக பேசிய உடற்பயிற்சி உதவி ஆசிரியர் மதிவாணன் மீது சட்ட நடவ டிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தின் சார்பாக புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.வைகை, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கே.எம்.பாலா ஆகியோர் தலைமை ஏற்றனர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.சுக தேவ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூன்று அமைப்புகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.