districts

புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி

புதுக்கோட்டை, ஜன.9 - மோட்டார் வாகன விபத்து  வழக்கில் இழப்பீட்டுத் தொகையை  வழங்காததால் புதுக்கோட்டையி லுள்ள மாவட்ட வன அலுவலகத்தில், நீதிமன்றப் பணியாளர்கள் திங்கள் கிழமை மாலை ஜப்தி நடவடிக்கை மேற் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி வட்டத்தைச் சேர்ந்த ராசியமங்க லத்தைச் சேர்ந்த ஜான், மைக்கேல் சாமி  ஆகியோர் கடந்த 2014 ஏப்ரல் 9 ஆம்  தேதி வம்பன் கருப்பர் கோவில் அருகே  இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, வனத்துறை வாகனம் மோதி உயிரி ழந்தனர். இந்த விபத்து தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இவர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.17  லட்சம் இழப்பீடாக வழங்க உத்தர விட்டது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்  தாக்கல் செய்யப்பட்ட வனத்துறை யின் மேல்முறையீட்டு வழக்கில், இந்தத்  தொகையைக் குறைத்து தலா ரூ. 13.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப் பட்டது. இழப்பீடு வழங்கப்படாத நிலை யில் பாதிக்கப்பட்டோர் 2019 இல் நிறை வேற்று மனுவைத் தாக்கல் செய்த னர். இதைத் தொடர்ந்து முதல் தவணை யாக தலா ரூ. 7.25 லட்சம், இவர்க ளின் குடும்பங்களுக்கு இழப்பீடாக  வனத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.  அதன்பிறகும் நிலுவைத் தொகை தலா ரூ.6 லட்சம் வழங்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் திங்கள்கிழமை மாலை, மச்சுவாடியிலுள்ள மாவட்ட  வன அலுவலகத்துக்கு, நீதிமன்றப்  பணியாளர்கள் மற்றும் வழக்குரை ஞர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் வந்த னர்.  வன அலுவலகத்திலுள்ள பொருட் களை ஜப்தி செய்வதாக அறிவித்து, உள்ளே  இருந்த மேசைகள், நாற்காலி கள், கணினிகளை வெளியே எடுத்து வைத்து மதிப்பிடும் பணியில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மாவட்ட வன அலு வலர் சோ.கணேசலிங்கம் பாதிக்கப் பட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். கடந்த 2023 நவம்பர் 21 அன்று  வனத்துறையின் தலைமை அலுவல கத்துக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டியது குறித்த முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து விளக்கினார். மேலும், 2024 மார்ச் 31  ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்க  வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  இதனை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்ததைத் தொடர்ந்து ஜப்தி நட வடிக்கை கைவிடப்பட்டு, பொருட்கள் மீண்டும் அலுவலகத்தின் உள்ளே எடுத்து வைக்கப்பட்டன.