விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில முதன்மைச் செயலார் உஞ்சை அரசன், மாநிலப் பொறுப்பாளர் அன்பானந்தம், விவசாய அணி மாநில துணைச் செயலர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.