districts

img

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிஐடியு மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 23 - சட்ட விரோதமாக மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் தலைமையில், மாநில துணைச்  செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பொரு ளாளர் சம்பத், மாவட்ட அமைப்பு செய லாளர் வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன் ரமேஷ் குமரேசன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள், ஸ்ரீரங்கம் வட்டார  போக்குவரத்து அலுவலர் குமாரிடம் செவ்வாயன்று மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில், “ 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு போக்குவரத்துத் துறை குறைந்த பட்சம் 1.8 கி.மீட்டருக்கு ரூ.25 எனவும், அதற்கு  மேல் ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 எனவும் அரசாணை வெளியிட்டு சட்டத்தை அமலாக்கியது. இன்று வரை அந்த  கட்டணத்தை மாற்றியமைக்காமல் அரசு  உள்ளது. கட்டணம் தொடர்பாக நீதிமன்ற மும் உத்தரவிட்டு உள்ளது.  தற்போது அரசு, தொழிற்சங்க தலைவர்க ளையும், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி களையும் அழைத்து கட்டணம் தொடர்பாக சில கருத்து கேட்பு கூட்டம் நடத்தியுள்ளது. கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு இருக்கும் போது, மண்ணச்சநல்லூர் பகுதியில் சி.எம். சதீஸ் ஆட்டோ ஓட்டுநர், ‘மோனி குழு  கம்பெனி’ என்ற பெயரில் 1.5 கி.மீட்டருக்கு ரூ.50 எனவும், அதற்குமேல் ஓடும் ஒவ்வொரு  கிலோ மீட்டருக்கு ரூ.18 எனவும் பத்தி ரிக்கை செய்தி, துண்டு பிரசுரம் ஆகியவற்றை  பயணிகளிடம் கொடுத்து பிரச்சாரம் செய்கிறார்.  இதன்மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு இடையே ஒரு மோதல் போக்கை உருவாக்க  முயற்சிக்கிறார். எனவே சட்ட விரோதமாக சி.எம்.சதீஸ் என்பவர் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்து, விளம்பரம் செய்யும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார  போக்குவரத்து அலுவலர் குமார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.