districts

img

அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செயல்பட்ட ஆளுநரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் மேலவளவில் தொல்.திருமாவளவன் பேச்சு

மதுரை, ஜூலை 1-

       தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பிலிருந்து  நீக்கியதன் மூலம் அரசியல் சாசனத்திற்கே சவால் விடுத்துள்ளார். மாநிலத்தில் அரசியல மைப்பு நெருக்கடியை உருவாக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சிக்கிறார். அவரைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். நீக்குவது தொடர்பாக விவாதிக்க  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கூறினார்.

   மதுரை  மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பட்டி யலின மக்கள் படுகொலை செய் யப்பட்ட மேலவளவு படுகொலையின் 26 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இங்குள்ள அவர்களது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியபின் நடைபெற்ற நினை வேந்தல் கூட்டத்தில் அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.  

    மேலும் அவர் பேசுகை யில், ஆளுநர்  தொடர்ந்து சர்ச்சைக் குரிய கருத்துகளை கூறி வருகிறார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட  வள்ள லாரை சனாதனத்துடன் இணைத்தவர் அவர்.

    மாநில அமைச்சரவையிலிருந்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை நீக்குவதாக  ஆளுநர் ஒருதலைப் பட்சமாக அறிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்றார். இந்தச் செயலை செந்தில்பாலாஜிக்கு எதிரானதாகவோ முதல்வருக்கு எதிரா னதாகவோ, திமுக அரசுக்கு எதிரானதா கவோ கருதக்கூடாது. ஆளுநரின் நட வடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

சாதி இந்துக்களின் தலைவர்கள் தங்கள் சமூக மக்களுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்திருந்தால் மேல வலவு படுகொலையைத் தடுத்திருக்க லாம்.  இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட் டம் நடத்தியவர்களிடம், மாநில தேர்தல் ஆணையம் பத்தாண்டுகளுக்கு உள்ளாட்சி இடஒதுக்கீடு என்ற முடிவை, சட்டப்படி எடுத்ததால், அதை திரும்பப் பெற முடியாது என்று கூறியிருக்க வேண்டும்.

    பட்டியலின மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். சனாத னத்தை உறுதியுடன் எதிர்ப்பேன் என்றார்.

    மேலவளவு தியாகிகள் நினைவி டத்திற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின ருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினரும் கிராம மக்களும் வரவேற்ப ளித்தனர்.

கொடிமரத்தை தூக்கிச்  சென்றது யார்...?

    முன்னதாக வெள்ளிக்கிழமை காலை பத்து மணி அளவில் மேலூர்-மேலவளவு சாலையில் உள்ள சுந்தர்ராஜபுரம் வினோபா காலனியில் ஏற்கனவே இருந்த கொடிமரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் ஊன்ற அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஊன்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கொடிமரத்தை, அதிகாரிகள், கொடிமரம் ஊன்ற அனு மதி யில்லை எனக்கூறி தூக்கிச் சென்று விட்டதாகக் கூறி விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடு பட்டனர். பின்னர் ஒருவழியாக அந்தக் கொடிமரம் ஒரு வாகனத்தில் வந்து சேர்ந்தது. இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.