districts

ஆக்கூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில்லை: சிபிஎம் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை, ஏப்.30 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் ஆபத்தான நிலையில் சிகிச்சை வேண்டி வருபவர்கள் அலைக் கழிக்கப்படுவதாகவும் சில நேரங்க ளில் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள் ளது. மேலும், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணி செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தி யுள்ளது.  இது தொடர்பாக கட்சியின் செம்ப னார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகையில், கடந்த ஏப்.7  அன்று இரவு தலைச்சங்காடு கிராமத்தை  சேர்ந்த சௌந்தராஜன் என்பவரின் மனைவி தமிழ்செல்விக்கு (42)  மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஆக்கூர் அரசு  மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது மருத்துவர் இல்லையென கூறியதையடுத்து ஆம்புலன்ஸ் வசதி யும் இல்லாததால், தமிழ்செல்வியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும்  வழியிலேயே அவர் உயிரிழந்திருக் கிறார்.  மேல்படிப்புக்காக மருத்துவர் சென்று விட்டதாலேயே இரவில் மருத்து வர்கள் சிகிச்சையளிப்பதில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் நம்பி யுள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தினால் மட்டும் போதாது. மருத்து வர்களை நியமிப்பதோடு, வசதிகளை யும் ஏற்படுத்த வேண்டும். உயர்படிப்புக் காக மருத்துவர்கள் சென்று விட்டனர் என்றால் மருத்துவர்களே இல்லாமல் மருத்துவமனை எதற்கு?   ஆக்கூரை சுற்றியுள்ள சுமார் 30-க்கும்  மேற்பட்ட கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன்கருதி உடனடியாக  மருத்துவமனைக்கு கூடுதல் மருத்து வர்களை நியமித்து மருத்துவ உபகர ணங்களை அதிகப்படுத்திட வேண்டும்.  மேலும் அவசர ஊர்தி சேவைகளை ஏற்பாடு வேண்டும். இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என்றார். பின்னர் கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்த தமிழ்செல்வி குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட் டோர்  வட்டார மருத்துவர் அலுவலரி டம் மனு அளித்தனர்.