districts

img

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப்.27- டாஸ்மாக் சுமைப் பணி தொழிலா ளர்களுக்கு ஏற்று கூலியை உயர்த்தி தீபாவளி போனசை வழங்கிட கோரி கும்பகோணம் அருகே உள்ள திருபு வனம் டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு  டாஸ்மாக் சுமைப் பணி தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நாகை  மாவட்ட டாஸ்மாக் குடோன் செயல் பட்டு வருகிறது. அந்த குடோனில் ஏராள மான சுமைப் பணி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் களுக்கு தாய், ஆர்.ஆர்.ட்ரான்ஸ் போர்ட் நிலுவையில் வைத்திருக்கும் கூலியை பெற்று தர வேண்டும். நிர்வா கத்தின் நிதியிலிருந்து தொழிலாளர் களுக்கு இபிஎப், இஎஸ்ஐ செலுத்தி முறைப்படுத்த வேண்டும். நிர்வாகம் சட்டப்படி 20 சதவீதம் தீபாவளி போனசை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருபுவனத்தில் உள்ள குடோன் முன்பு  சுமைப் பணி தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால், மாவட்டத் தலைவர் எம்.கண்ணன்,  மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவ பாரதி சேகர், ஆட்டோ தொழிலாளர்கள்  சங்க கவுரவத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.  திருவாரூர் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு  சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு  மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் என்.அனிபா, மாவட்ட துணைச் செயலாளர் என்.லெனின், சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் டி.வீரபாண்டியன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.