districts

img

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை.யில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி-தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், டிச.31 -  தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஞாயிறன்று தஞ்சாவூர் அறிஞர்  அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், “வெற்றி பாதை - தேர்வை வெல்வோம்!  வெற்றி வாகை சூடுவோம்!” என்ற தலைப்பில், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி - தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி  அலுவலர் இ.மாதவன் கருத்துரை யாற்றினார். தலைமையாசிரியர் எ. நடராஜன், முதுகலை ஆசிரியர்கள் பேரா.குமரன், எம்.வி.ஆம்ஸ்ட்ராங், பேரா.செந்தமிழ்குமார் ஆகியோர் பாடங்கள் குறித்தும், அரசு தேர்வை எதிர்கொள்வது, தன்னம்பிக்கை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. எழுத்தாளர் கவிஞர் நந்தலாலா பேசுகையில், “பெரியாரின் பெண்ணுரி மையின் சிந்தனைகள் நமக்கு தேவை யான ஒன்றாகும். அறிவார்ந்த சமூகத்தை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும். அதற்கு தன்னம் பிக்கை அவசியமான ஒன்றாகும். உழைப்புக்கு வெற்றி அவசியம். அந்த  வெற்றி பாட்டாளி மக்களிடத்தி லிருந்துதான் கிடைக்கிறது” என்றார்.  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெ.இராமச்சந்திரன், பதிவா ளர் பி.கே.ஸ்ரீவித்யா வாழ்த்திப் பேசினர்.  விழாவில், சுமார் 300-க்கும் மேற்பட்ட 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற் றனர். அறிவியல் சார்ந்த கண்காட்சி களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.