districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் நாகை முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம்

நாகப்பட்டினம், நவ.25 - தமிழ்நாடு மின்சார வாரி யத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப் பட்டினம் மாவட்டத்தில் அனைத்து  ஒன்றியங்கள் மற்றும் நகரப் பகுதி களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தோடு ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடை முறைப்படுத்துவதை தமிழ்நாடு அரசாங்கம் முற்றிலும் நிரா கரிக்க வேண்டும். ஒன்றிய அரசு  கொண்டுவரும் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம், கேரள  அரசை போல நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் தெற்கு ஒன்றி யம் பாப்பா கோவில் கடைத்தெரு வில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு நாகை தெற்கு  ஒன்றியச் செயலாளர் ஏ. வடிவேல் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும், கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான நாகைமாலி விளக்க உரை யாற்றினார். ஒன்றிய குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  சிக்கல் கடைத்தெருவில் நடை பெற்ற கூட்டத்திற்கு நாகை வடக்கு  ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். நாகை  மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து விளக்க உரையாற்றினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம்  சார்பாக இருக்கை ஊராட்சியில்  நடைபெற்ற கூட்டத்தில் கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி விளக்க உரையாற்றினார்.  கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம்  சார்பில் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தை யன் தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்  சந்திரபோஸ் விளக்க உரையாற்றி னார். நாகப்பட்டினம் நகரக் குழு  சார்பில் புதிய பேருந்து நிலையம்  மற்றும் அபிராமி அம்மன் திருவா சல் திடல் ஆகிய பகுதிகளிலும், திருமருகல் ஒன்றியம் சார்பில் போலகம், பொறக்குடி, கணபதி புரம், நடுக்கடை, கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப் பூண்டி கடைத்தெருவிலும், கீழை யூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கீழையூர் கடைத் தெருவிலும், வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் சார்பில் சாருமடை பகுதியிலும், வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஆயக்காரன்புலம் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், நகரச் செயலாளர்கள் உரையாற்றினர்.