திருத்துறைப்பூண்டி, மார்ச் 24 - நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதவாத வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பகத்சிங், சுகதேவ், ராஜ குரு நினைவு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவாரூர் மாவட்ட குழு சார்பில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து காலை 11 மணிக்கு பேரணி துவங்கப்பட்டு, தியாகி பி.எஸ்.ஆர் நினைவிடத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.பி. ஜோதிபாசு தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டத் தலைவர் சலாவுதீன், மாவட்டப் பொருளாளர் வேலவன், மாவட்ட துணைத் தலைவர் விஜய், திருத்துறைப் பூண்டி நகர செயலாளர் சிவசாகர் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜ், பகத்சிங், சரவணன், கிஷோர்குமார், ஜெய்கிஸ், ஒன்றிய தலைவர்கள் மதன்சிங், வீரசேகரன், அருள்குமார் மற்றும் 500-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.