திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சிராப்பள்ளி மண்டலக் குழுக் கூட்டம் மன்னார் புரத்தில் நடைபெற்றது. கூட்டத் திற்கு தஞ்சாவூர் கிளைச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை கரூர் கிளைச் செய லாளர் கந்தசாமி வாசித்தார். மண்டலச் செய லாளர் பஷீர் வேலை அறிக்கை சமர்ப் பித்தார். மாநில நிர்வாகி சண்முகசுந்தரம் நிறைவுறையாற்றினார். கூட்டத்தில் தமிழக மின்வாரியம் அறி வித்துள்ள பிபி-2 உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடை யாளம் கண்டு வாரியம் அறிவித்த தினக் கூலியை வழங்க வேண்டும், மருத்து வக் காப்பீட்டு அட்டையில் உள்ள குளறு படிகளைச் சரி செய்ய வேண்டும், மின் வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங்கை கைவிட்டு காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக திருச்சிராப் பள்ளி கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.