அறந்தாங்கி, மே 18-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் ஆவின் பால் சேகரிப்பு மற்றும் விநியோ கம் செய்யும் பால் பண்ணை அமைத்திட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டா வது நகரமான அறந்தாங்கி 35 கிலோ மீட்டர் தூரத்தில் 40 வேகத்தடைகள் இருப்ப தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயண தூரமாக இருக்கிறது. இந்நிலையில், கோடைகால வெயில் அதிகமாக அடிப்ப தாலும் ஆவின் பால் அறந்தாங்கி வரும் போதே அல்லது வந்தபின் கெட்டுப்போகி றது. அதனால் ஆவின் பால் வாங்குவதில் பொதுமக்களும் விற்பனையாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே தனியார் நிறுவனங்களின் பால் அறந்தாங்கியில் ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஆமோகமாக விற்பனை ஆகிறது. தமிழ்நாடு அரசின் தரமான ஆவின் பால் மக்களுக்கு சென்று சேரவில்லை. எனவே தமிழ்நாடு அரசு ஆவின் நிர்வாகம் அறந்தாங்கியில் ஒரு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை பண்ணையை அமைத்து சுற்று வட்டார பகுதிகளில் ஆவின் விற்பனை நிலையங்களையும் அமைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
அவர்தன் கோரிக்கையை தமிழ்நாடு அரசு தலைமை செயலகம், தமிழ்நாடு ஆவின் நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.டி.ராமசந்திரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.