நாகர்கோவில், ஆக. 16
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி புதனன்று அதிகாலை 4 மணி முதலே முக்கடல் சங்கமத்தில் மக்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் முன்னோர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த வரும் மக்களின் வச திக்காக நாகர்கோவிலில் இருந்து கன்னி யாகுமரிக்கு ஏராளமான சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட்டன.
குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முன்னோர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். குழித்துறையில் நினைவஞ்சலி செலுத்தி விட்டு முன்னோர்களின் நினைவாக மரக்கன்று, அல்லது செடிகளை வாங்கி நடு வதும் வழக்கம். இதற்கெனவே குழித்துறை நகராட்சி சார்பில் வாவுபலி பொருட்காட்சி யும் நடத்தப்படுகிறது. இங்கு செடி, மரக்கன்று களின் விற்பனையே பிரதானமாக இருக்கும். குழித்துறையில் இம்முறை கேரள மக்களின் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, குழித்துறை மட்டுமல்லாது, முக்கிய சுற்றுலாத்தலங்களிலும் அதிகள வில் கூட்டம் காணப்பட்டது. அனைத்து இடங்களிலும் காவலர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன் தலைமை யில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.