மயிலாடுதுறை, பிப்.9 - மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரித் தமிழாய்வுத் துறை யில் ‘மயிலாடுதுறை மாவட்ட விளிம்புநிலை மக்களின் பண் பாட்டு அடையாளங்கள்’ என்னும் தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழா தமிழாய்வுத் துறையில் தொடங்கியது. முனைவர் சு.ரமேஷ் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில், தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு தொடக்கவு ரையில், கள ஆய்வின் அனுபவங்களையும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் மேற் கொண்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளையும் அறிமுகப்படுத்தி னார். 90 நாடுகளில் 3700 மில்லியன் மக்கள் பழங்குடியினராக உள்ளனர். தமிழக அளவில் 37 குடிகள் உள்ளனர் என்றார்.