கரூர்/திருவாரூர், மே 26-
தமிழக உழைப்பாளி மக்களின் நலனுக்காக 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங் கிய சிஐடியு நடைபயணக்குழு கரூர் மாவட்டத்திற்கு வெள்ளிக் கிழமை காலை வருகை தந்தது. பயணக் குழுவிற்கு சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் மாலை வர வேற்பளிக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடை பயண குழு துவக்கவிழாவிற்கு சாலை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் நடை பயணத்தை துவக்கி வைத்தார். நடைபயணக்குழுத் தலைவர் கே.சி.கோபிகுமார், சிஐடியு மாநி லச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.
அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ரத்தின மாலா நடைபயண குழுத் தலைவரி டம் ரூ.2,000 நிதி வழங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கா.கந்த சாமி, சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மண்டல செயலாளர் தன பால், தையல் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.ஹோச்சுமின், மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் அங்கன் வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ரெத்தினமாலா, மாவட்டச் செயலாளர் சாந்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட் டத்திற்கு எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சாவூர் கோட்டத் துணைத் தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசி னார். மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஜ.ஜெய ராஜ், வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஐ.வெங்கடேசன், துறைவாரி சங்க மாவட்ட செயலாளர்கள் ஆர்.சுரேஷ் குமார், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து லைட் ஹவுஸ் கார்னர், காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் நடைபயணக் குழு விற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்திகிராமத்தில் ஏஐடியுசி சார்பில் நடைபயணக் குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ் ணராயபுரம் மற்றும் லாலாபேட்டை யில் விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர்
கடலூரில் தொடங்கிய பிரச்சா ரப் பயணம் திருவாரூர் மாவட்டத் தில் திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல் ஒன்றியங்களில் பிரச்சா ரம் மேற்கொண்டது.
பயணக்குழுத் தலைவர் கே. திருச்செல்வம், சி.ஜெயபால், தையல் தொழிலாளர்கள் சம்மேளன மாநிலப் பெருளாளர் ஆர்.மாலதி, முறைசாரா தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி யு.ராமச்சந்திரன் உள்ளிட்ட நடைபயணக் குழுவினருக்கு திருவாரூரில் பயணக் குழுவிற்கு திருவாரூர் மேல கோபுரவாசல், துர்காலயா சாலை,கல்லுப்பாலம் ஆகிய இடங்களில் கட்டுமானத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோர்சிங் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
கொராடாச்சேரி ஒன்றியம் திருக் கண்ணமங்கையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், காப்பனா மங்கலத்தில் ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது. குடவாசல் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமையில் நகர், ஒன்றிய குழுக்கள் மற்றும் மாதர், மாணவர்கள், வாலிபர் சங்கம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
நடைபயண பிரச்சாரத்தின் நோக்கத்தை விளக்கி திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், தலைவர் எம்.கே.என்.அனிபா மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பிரேமா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.தவமணி, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன், காப்பீட்டுத் துறை ஊழியர் சங்க தஞ்சாவூர் கோட்ட இணைச் செய லாளர் செந்தில் உள்ளிட்ட தோழமை சங்கத்தினர் பங்கேற்றனர்.