திருத்துறைப்பூண்டி, மே 25-
திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் கொருக்கை, பாமணி திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் கடலூரி லிருந்து திருச்சி வரை நடைபெறும் நடை பயண பிரச்சாரக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடைபயணம் நகரத்தின் முக்கிய சாலை வழியாக வந்து இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது.
இதில், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், வாலிபர், காப்பீட்டுக் கழக ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.