அறந்தாங்கி, நவ.26 - புதுக்கோட்டை மாவட் டத்தில் கடந்த சில தினங் களாக மழை பெய்து வந்த நிலையில், வெள்ளியன்று அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய் தது. இதில் அறந்தாங்கி வடக்கு வீதி பகுதியில் சரவ ணன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, சுவர் இடியும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப் போது சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந் ததை கண்டு அதிர்ச்சியடைந் தனர். வீட்டின் சுவர் இடியும் சத்தம் கேட்டு வெளியே வந்த தால் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது.