districts

img

மத நல்லிணக்கத்தை போற்றும் கிராமம் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் கொண்டாடும் இந்துக்கள்

தஞ்சாவூர், ஜூலை.29 –

      தஞ்சாவூர் அருகே மத நல்லி ணக்கத்தை போற்றும் விதமாக, சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மொஹரம் பண்டிகையை இந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர்  கிராமத்தில், இந்துக்கள் பெரும்பான்மை யாக வசித்து வருகின்றனர்.

    இவர்கள் சுமார்  300க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, மொ ஹரம் பண்டிக்கையின் 10 நாட்களுக்கு முன்பாக, விரதத்தை துவங்கி, ஊரின் மையப் பகுதியான செங்கரையில் உள்ள சாவடி யில், (ஊரின் பொதுவான இடம்), உள்ளங்கை போன்ற உருவத்தை “அல்லா சாமி”, என வைத்து, தினமும் அதற்கு பூஜை கள் நடத்தி, பாத்திகா ஓதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

   அதன்படி இந்தாண்டு விரதம் இருந்து வெள்ளிக்கிழமை இரவு, உள்ளங்கை உரு வத்திற்கு மாலை அணிவித்து வீதி உலா வாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்ற னர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழங்கள் வைத்து வழிபட்டனர்.

   பின்னர் சனிக்கிழமை அதிகாலை, கிரா மம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்து  செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எலு மிச்சை மாலை மற்றும் பட்டுத்துண்டை சாத்தி  வழிபட்டனர்.  

    மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அல்லா சாமியை தூக்கி வரும் நபர்கள் முதலில் தீக் குண்டத் தில் இறங்கினர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண் கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீக் குண்டத் தில் இறங்கி வழிபட்டனர்.   இது குறித்து கிராம மக்கள் கூறியதா வது;  எங்கள் கிராமத்தில், குளம் வெட்டப் பட்ட போது உள்ளங்கை உருவத்தில் உலோ கம் கிடைத்தது. அது அல்லாவின் கையாக கருதி கோவில் அமைத்து வழிபாடு செய்து  வருகிறோம். இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும் போது, இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்ற னர். எங்கள் ஊரில் பிறந்த பெண்கள்  அனைவரும் மொஹரம் திருவிழாவின் போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயா ரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றள வும் கடைபிடித்து வருகின்றனர். சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, மத நல்லி ணக்கத்தை பறைசாற்றும் விதமாக, கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வரு கிறோம்.” இவ்வாறு தெரிவித்தனர்.