திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - நம் சமூகத்தில் ஒரு பெண் சாதிப்பதை ஓராயிரம் கண்கள் கவனிக்கின்றன என்றார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவியர் நல மேம்பாட்டு குழு சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் அருள், முனைவர் ஜான்பீட்டர் அருளானந்தம், இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்தி ரன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். மாண வியர் நல மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பா ளர் முனைவர் மேகி டயானா வரவேற்றார். முனைவர் ஜெயஸ்ரீ நாய்கென் சிறப்பு விருந் தினரை அறிமுகம் செய்தார். திண்டுக்கல் மாவட்ட முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மாதர் சங்க மாநில துணைத் தலைவருமான பாலபாரதி சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணி யாற்றியதைவிட, இந்தக் கல்லூரி வளா கத்தில் சாதனையாளர் பெண் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இயற்கையின் அத்தனை அழகையும், திறமையையும் பிரம்மாண்டமாக ரசிக்கிற பார்வை ஆண்களைக் காட்டிலும் பெண் களுக்கே அதிகமாக இருக்கிறது. அதே வேளையில், அந்த ரசனை ஈர்ப்பாக மாறி அது தனக்கு மட்டுமானது என்ற புரிதலற்ற போக்காக மாறுகிறபோது பிரச்சனை யாகிறது. அந்தப் பிரச்சனை சரி செய்யப்பட வேண்டும். மாணவர்களை விட மாணவிகளின் சாத னைகளை நாம் பாராட்டுவதற்குக் காரணம், ஆண்களின் சாதனை சுதந்திரமாக கிடைப் பவை. பெண்களுடைய சாதனை என்பது பல ரின் கேள்விக்கும் கேலிகளுக்கும் உள்ளாகி வருவது என்பதை நாம் உணர வேண்டும். இங்கு ஒரு பெண் சாதிப்பதை ஓராயிரம் கண்கள் கவனித்துக் கொண்டே இருக் கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு விடுதலைப் பூர்வமான சமூகத்தை கட்டமைப் பதற்கு இந்த விழா வழிவகை செய்யட்டும்” என்றார். மகளிர் தினத்தையொட்டி நடை பெற்ற போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. முனைவர் கீதா சிவராமன் நன்றி கூறி னார்.