கும்பகோணம், ஜூலை 4-
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர்கள் (பொதுப் பிரிவு) மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி, வழிகாட்டு முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். கும்பகோணம் சரக காவல் ஆய்வா ளர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் மதுரையைச் சேர்ந்த பழனிகுமார் பயிற்சி அளித்தார்.