பாலஸ்தீன விடுதலைப் போராளி யாசர் அராஃபத் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கழக மாவட்டச் செயலர் கோ.பாஸ்கர் தலைமை வகித்தார். கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும் மருத்துவருமான ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் மூ.வீரபாண்டியன், தெற்கு மாவட்டச் செயலர் முத்து.உத்திராபதி, கழக மாநிலச் செயலர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.