districts

img

தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சிகளின் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.