districts

img

முடிகொண்டான் ஆற்றுப் பாலத்தை புதிதாக அமைத்துத் தரக் கோரிக்கை

கும்பகோணம், டிச.22- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 69-பெரப்படி ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன  ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெரப்படி கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கையை  விளக்கி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் தருமையன், ரங்கசாமி, வீரக்குமார், பவானி, சத்யராஜ், முருகன் ஆகி யோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர் பிரேம்நாத் நன்றி தெரிவித்தார். பெரப்படிக்கும் சித்தாடிக்கும் இடையில் உள்ள முடிகொண்டான் ஆற்றுப்பாலத்தை புதிய பாலமாக அமைக்க வேண்டும். குச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் புதிய நவீன  நிழற்குடை அமைத்துத் தர வேண்டும். பெரப்படி வடக்குத் தெரு வடிகால் வாய்க்கால் மற்றும் பழுதடைந்த பாலத்தை  சீரமைக்க வேண்டும். வடக்குத் தெரு குடிநீர் தொட்டி மிகவும்  பழுதாகி இடியும் நிலையில் இருப்பதால், புதிய நீர் தொட்டி அமைக்க வேண்டும். பெரப்படி வடக்குத் தெரு சித்தாலத்தூர் இடு காட்டு பாதையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும். பெரப்படி ஊராட்சிக் குட்பட்ட அனைத்து அரசு அலுவல கங்களும் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவை மீண்டும் பெரப்படி  ஊராட்சிக்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை  கூட்டத்தை வார்டு வாரியாக சுழற்சி முறை யில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.