திருபுவனம் அரசு நூலகத்தை பாதுகாத்திட நிதி வழங்கிய வாசகர் கும்பகோணம், டிச.28 - கும்பகோணம் அருகே திருபுவனத்தில் அரசு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. அந்த நூலகத்தில் வாச கர்கள் அமர்ந்து படிக்கவும், நூலகத்தை மேம்படுத்தி காற்றோட் டமான வசதிகள் ஏற்படுத்தவும், புதிய கட்டிடம் கட்டவும் வாசகர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் ஓய்வு பெற்ற திருபுவனம் திகோ சில்க்ஸ் பணியாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரு மான தோழர் டிசி என்று அழைக்கப்படும் டி.சொக்கலிங்கம், தனது தந்தையார் தங்கவேலின் 16 ஆவது நினைவு நாளில் திருபுவனம் கிளை நூலகத்திற்கு ரூ.1000 புரவலர் நிதி செலுத்தி, புரவலராக இணைந்து கொண்டார்.