தஞ்சாவூர், ஜூன் 7-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்தவர் லூப்னா, திருநெல்வேலி கே.டி.சி.நகர் ஆசி ரியர் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் கள் இருவரும் தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி., கோச்சில் திங்கள்கிழமை பயணம் செய்தனர்.
இந்நிலையில், ஒரே கலரில் இருவரின் டிராவல் சூட்கேஸ் இருந்தால், பட்டுக்கோட் டையில் லுாப்னா தவறுதலாக, ஸ்ரீதேவியின் சூட்கேஸை எடுத்துக்கொண்டு இறங்கி விட்டார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று இறங்கி சூட்கேசை திறந்து பார்த்தபோது சூட்கேசில் இருந்து நகைளை காணவில்லை, உடை களும் மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே காவல்துறையில் ஸ்ரீதேவி புகார் அளித் தார். அதே நேரத்தில், லூப்னாவும், தனது சூட்கேஸ் மாறி இருப்பதை வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, மீண்டும் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, ரயில்வே காவல்துறையிடம் தகவல் அளித்தார்.
இதையடுத்து இரண்டு பகுதி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி னர். பின்னர் மீண்டும் ஸ்ரீதேவி பட்டுக்கோட் டைக்கு வந்தார். அவரிடம் பட்டுக்கோட்டை ரயில்வே காவல்துறையினர் முன்னிலை யில், லூப்னாவிடமிருந்த சூட்கேஸை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தார்.
அப்போது அந்த சூட்கேஸ்சில் ஸ்ரீதேவி யின் 40 பவுன் தங்க நகை இருந்தது தெரிந்தது. சூட்கேஸை பெற்றுக்கொண்ட ஸ்ரீதேவி, லூப்னாவிற்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.