districts

img

அறந்தாங்கி அரசு கல்லூரிக்கு 24 வகுப்பறைகளுடன் புதிய கட்டடம்

அறந்தாங்கி, நவ.10 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருநாவலூர் பகுதி யில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி  வருகிறது. இதற்கு அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் முயற்சியில் ரூ.7 கோடி நிதியில் கூடுத லாக 24 வகுப்பறை கட்டடம்  கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் பராமரிப்பு பணி குறித்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள பொறியாளர்களிடம் கட்டடத் தின் தரம் குறித்து கேட்ட றிந்தார். பின்னர், புதிதாக கட்டப் பட்டு வரும் கட்டடத்திற்கு ‘முத்தமிழ் அறிஞர் கலை ஞர்’ என பெயர் சுட்ட வேண்டுமென அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தமிழக  அரசுக்கு கோரிக்கை விடுத் தார். ஆய்வின் போது, கல்லூரி முதல்வர் பாலமுரு கன் மற்றும் ஆவுடையார் கோவில் காங்கிரஸ் வட்டா ரத் தலைவர் கூடலூர் முத்து  மற்றும் மணமேல்குடி காங்கி ரஸ் வட்டாரத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.