districts

img

வாலிபர் சங்க உறுப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல் பாஜக குண்டர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17-

      திருச்சி மாவட்டம் அரியமங்க லம் அம்மாக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வரு கிறது. இதனால் இப்பகுதி சிறு வர்கள் கஞ்சாவிற்கு அடிமையா கும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் போதை இல்லா கலாச்சாரத்தை உருவாக்க இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் கிளைச் செயலாளர் தவ்பீக், போதைக்கு எதிரான கை யெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சா ரம் செய்து வந்தார்.

     இதனால் கோபமடைந்த சமூக  விரோதிகள் தவ்பிக்-ஐ கொலை செய்யும் நோக்கத்தோடு அரி வாள் உள்ளிட்ட ஆயுதங்களால், அவரைத் தாக்கி 10 இடங்களில் வெட்டி சாய்த்தனர். படுகாய மடைந்த தவ்பிக் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச் சையில் இருந்து வருகிறார். இதனை கண்டித்தும், இதில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள் அனை வரையும் உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்  கீழ் சிறையில் அடைக்க வலியுறுத் தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

    திருவெறும்பூர் தாலுகா குழு  சார்பில் திருவெறும்பூர் கடைவீதி யில் வெள்ளியன்று மாலை கண்டன  ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். காட்டூர் பகுதி செயலா ளர் சந்தோஷ், தலைவர் யுவராஜ், திருவெறும்பூர் பகுதி தலைவர் தமிழ்ச்செல்வன், புறநகர் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில துணைத்தலைவர் லெனின்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  

    புள்ளம்பாடியில் ஒன்றியத் தலைவர் வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றியச் செயலாளர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் ஆணைமுத்து ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.

 திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் நன்னி லம், வலங்கைமான் ஒன்றியங்க ளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிப்பந்தல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் ஜெ.கக்கன் தலைமை வகித்தார். அமைப்பின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா கண்டன உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடியில் ஒன்றியத் தலைவர்  எஸ்.சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் பி. விஜய், முன்னாள் மாவட்டப் பொரு ளாளர் எஸ்.இளங்கோவன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். குடவாசலில் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே, வாலிபர் சங்கத்தின் குட வாசல் ஒன்றியத் தலைவர் பா. பகத்சிங் தலைமையில், ஒன்றியச் செயலாளர் கா.பகத்சிங் முன்னி லையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

புதுக்கோட்டை

     புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் நகரச் செயலா ளர் கு.ஜெகன் தலைமை வகித் தார். வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆ.குமாரவேல், தலைவர் எம்.மகாதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த் தனன், தலைவர் சந்தோஷ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், நகரச் செயலா ளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.