districts

img

மாத ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும்

கும்பகோணம், ஜூலை 24-

    கட்டுமானத் தொழிலாளர் ளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000 என்பதை உயர்த்தி ரூ.2000 என  முடிவு செய்ததை உடனே அம லாக்க வேண்டும் என்பது உள்  ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். 60 வயது முடிந்தபின், ஓய்வூதியத்தை காலதாமதமின்றி  உடனே வழங்க வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால் விண்ணப்  பித்த நாளிலிருந்து நிலுவையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயதில் புதுப்பிக்க தவறியவர் களுக்கும் ஓய்வூதியம் வழங்கி, தீபாவளி போனஸ் ரூ.5000 வழங்க வேண்டும். நல வாரியம், விபத்து நிதி,  இறப்பு நிதி, திருமண உதவி,  ஈமச்சடங்கு உதவிநிதி உள்ளிட்ட  அனைத்து பணப் பலன்களையும்  30 நாட்களுக்குள் வழங்கிட வேண்  டும்.

   நலவாரிய பதிவுக்கு விண் ணப் பிக்க விஏஓ சான்று தேவை என்பதை நீக்க வேண்டும். கட்டு மான தொழிலாளர்களை இஎஸ்ஐ  திட்டத்திலும் இணைக்க வேண் டும். கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க  வேண்டும். விபத்தில் ஊனம் ஏற் பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணம், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்  சம் காப்பீடு செய்வதை உறுதிப் படுத்த வேண்டும் என்பன உள்  ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்  கள் சங்கம் (சிஐடியு) சார்பில்  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஜெ.சின்னையன் தலைமை வகித்தார். சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சங்கத்தின் மாநில நிர்வாகி பி.துரைசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், கட்டுமானத் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் இ.டி.எஸ் மூர்த்தி, சிஐ டியு மாவட்ட துணை தலைவர் சா. ஜீவபாரதி, சேகர், திருபுவனம் கைத்தறி நெசவு சங்க தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் உரை யாற்றினர்.