திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் சிஐடியு சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நவமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், பரமசிவம், சிதம்பரம், பூமாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.